Skip to main content

முருகனின் 16 திருக்கோலங்கள்

முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். அந்த அழகனின் 16 திருக்கோங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.



சக்திதரன் : திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம். ஒரு முகம் இரு கரங்கள். இந்த முருகனை நினைத்தால் நினைத்தது நடக்கும்

கந்தசாமி   பழனி மலை மீது இருந்து அருள் புரிபவன்.  ஆண்டியின் திருக்கோலம். சகல காரியங்களும் சித்தி ஆகும்.

கஜவாகனர் : யானை மீது அமர்ந்த கோலம். நான்கு திருக்கரங்கள். இவரை நினைத்தால்  துன்பங்கள் யாவும் விலகி ஓடும்.

சரவணபவன் : சரவணன் - சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவர். பார்வதி அன்னையால் ஆறுமுகத்துடன் ஒரு முகமானவர். வீரத்தை அளிப்பவர்.

தேவசேனாபதி: தெய்வானையை மணந்த கோலம். இவரை தரிசித்தால் மங்களகரமான வாழ்வு கிட்டும்.

சுப்பிரமணியன் : ஒரு முகம். நான்கு கரங்கள். வினைகளை நீக்கி இன்பங்களை அளிப்பவர்

கார்த்திகேயன் :  கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தவர். ஆறுமுகம். பன்னிரண்டு கரங்கள் கொண்டவர். கார்த்திகை நட்சத்திர தினத்தில் இவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

குமரன் : நான்கு கரங்களுடன் தெய்வானையுடன் காட்சி தருபவர். இவரை வேண்டினால் திருமணம் விரைவில் நடக்கும்

ஷண்முகன் :  ஆறு முகம் பன்னிரண்டு கரங்களுடன் காட்சி தருபவர். திருச்செந்தூரில் உள்ள முருகன். இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிட்டும்.

தாரகாரி :  தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். போர்க் கோலம் பூண்டவர். இவரை வணங்கினால் மாயையில் இருந்து விடுபடலாம்.

வள்ளி மணாளன்: வள்ளியை மணம் புரிந்த கோலம். இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும்.

பாலசுவாமி: பாலன் வடிவம். ஒரு கரத்தில் தாமரை மலர். இன்னொரு கரம் இடை மீது இருத்திய கோலம். இவரை வணங்குவதன் மூலம் அங்கக் குறைபாடுகள் அகலும்

சேனானி: ஆறு முகம். பன்னிரு கரங்கள். தேவிகாபுரம் ஆலயத்தில் இந்த உருவம் உள்ளது. இவரை வணங்கினால் பகை அழியும். பொறாமை நீங்கும்.

கிரௌஞ்சபேதன்: கிரௌஞ்ச மலை வடிவில் இருந்த அசுரனை அழித்த கோலம். இவரை வணங்குவதன் மூலம் மனச் சஞ்சலங்கள் அகலும்

சிகி வாகனர்: மயில் மீது இருக்கும் உருவம். அழகுடன் இருக்கும் வடிவம். இவரை வணங்க இன்பமான வாழ்வு அளிப்பவர்

பிரம்ம சாஸ்தா:பிரம்மனை சிறையில் அடைத்த கோலம். சிறுவாபுரியில் இந்த கோலம் உள்ளது. இவரை வணங்கினால் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறலாம்.

Popular posts from this blog

எந்த நட்சத்திரகாரர்கள் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது

ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்க ள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருள் ஆகும். சிவ பெருமான் தன்னை ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்து   உள்ளார் என்றால் அதன் மகத்துவம் பற்றி நாம் அறிய லா ம்.  ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என்று போற்றப்படுகிறது. சிவனின் அருளைப் பெற ருத்ராட்சம் அணியலாம். ருத்ராட்சம் ஒரு மூலிகை என்றும் கூறலாம். நம் உடலோடு ஒட்டி இருந்தால் பல வித நோய்களில் இருந்து ந ம் மை காக்கும்.  இது உடல் ஆற்றல் மற்றும் மன ஆற்றலை அளிக்க வல்லது. எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியது. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை  முகம் என்று கூறுகிறோம். எத்தனை  கோடுகள் உள்ளனவோ அத்தனை முகம் உள்ளன என்று கூறுவோம் ஒவ் வொ ரு முகமும் வெவ்வேறு விசேஷ பலன்களை அளிக்கவல்லவை. எந்த நடசத் தி ரக்கார்கள் எந்த வகை ருத்ராட்சம் அணிய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். அசுவினி – 9 முகம் பரணி - 6 அல்லது 13 முகம் கார்த்திகை - 12 முகம் ரோகினி -   2 முகம்   மிருகசீரிடம் –   3 முகம்   திருவாதிரை –   8   முகம் புனர்பூசம்     -   5 முகம் பூசம் -   7 முகம் ஆயில்யம் – 4 முகம் மகம் – 9 முகம் பூரம்  - 6   அல்லது 1

பெண்களே, இந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் சொந்த வீடு கட்டும் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும்.

சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. சிறிய வீடாக இருந்தாலும் அது சொந்த வீடாக இருக்க வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் உண்டு. எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்பார்கள் . ஆனால் வீடு வாங்க வேண்டும் என்றால் கடன் வாங்க வேண்டும். அந்த கடனை நாம் அடைக்க வேண்டும்.  எனவே நமது பொருளாதார நிலை மற்றும் தகுதியை கருத்தில் கொண்டு தான் நாம் சொந்த வீடு வாங்க முடியும். தகுதிக்கு மீறிப் போனால் நாம் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே திட்டமிட்டு செயல்பட வேண்டும். நமது திட்டம் ஒரு புறம் என்றால் நாம் வெற்றி பெற கடவுளின் அருளும் வேண்டுமல்லவா ? நமது முயற்சியுடன் கடவுள் பிரார்த்தனையும் இணைந்தால் நமக்கு உத்வேகம் கூடும். வீடு கட்ட பணத்தை சேமிக்கும் எண்ணம் கூடும். சிக்கனத்தை கடைபிடிக்கத் தோன்றும் இப்படி தொடர்ந்து இருந்தால் வீடு கட்டும் கனவு சீக்கிரம் நிறைவேறும். இதற்கு வழிவகை கூறும் ஒரு ஆன்மீக பரிகாரத்தை இந்தப் பதிவில் காண்போம். சொந்த வீடு அமைய வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக நிறைய பரிகாரங்கள் உண்டு.நவகிரகங்களில் பூமிகாரகனாக திகழ்வது செவ்வாய் கிரகம். செவ்வாய்க்கு அதிபதி முருகன். சென்னையில் அமைந்து இருக்

சிவபெருமானின் அவதாரங்கள்

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன். பிறப்பும் இறப்பும் அற்றவாராக கருதப்படுகிறார். சைவ சமயதத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமான் பூமியில் மனிதனாக பிறந்ததை   சிவ   அவதாரங்கள் என்று கூறுகிறோம். பொதுவாக விஷ்ணுவைப் போல சிவபெருமான்   அவதாரம்   எடுப்பதில்லை. சிவபெருமான் மனிதனாக   அவதாரம்   எடுத்ததாக கூர்ம புராணம் கூறுகிறது .