Skip to main content

நினைத்த காரியம் நடக்கவும் வாழக்கையில் வெற்றி பெறவும் பஞ்சமுக ஆஞ்சநேய மாலா மந்திரம்! இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் என்றுமே வெற்றி கிட்டும்.

 நினைத்த காரியம் நடக்கவும் வாழக்கையில் வெற்றி பெறவும் பஞ்சமுக ஆஞ்சநேய மாலா மந்திரம்! இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் என்றுமே வெற்றி கிட்டும்.

சொல்லின் செல்வனாம் அனுமன் பக்திக்கும் வலிமைக்கும் பெயர் போனவர். பராக்கிரமசாலியான அனுமனின் ராம பக்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும். வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயர், என்று பல பெயர்கள் இவருக்கு உண்டு.அதிக சக்தியை தன்னுள் கொண்டு இருந்தாலும் தனது வலிமையை அறியாத அனுமன் தீவிர ராம பக்தன். ராம மந்திரம் இருக்கும் இடம் எல்லாம் அனுமார் இருப்பார்.

சிரத்தையுடன் கூடிய பக்திக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அனுமனை வணங்கினால் நமக்கு மன உறுதி கிட்டும். வலிமையும் ஆற்றலும் பெருகும். ஒரு கையில் சஞ்சீவி மலையும், ஒரு கையில் கதையும், நெஞ்சினுள் ராமர் சீதையையும் சுமந்து காட்சி தரும் அனுமன், பக்தியையும் வீரத்தையும் ஒரு சேரக் கொண்டவர். ராமர் மீது தான் கொண்ட பக்தியால்  இலங்கையை பஸ்மம் ஆக்கி அரக்கரகளை துவம்சம் செய்த அனுமன் ராவணனை வெல்லும் அளவிற்கு பராக்கிரமம் இருந்தாலும் அடக்கத்துடன் இருந்தவர். நமக்கு அருள் புரிவதில் வல்லவர்.  மன உறுதி மற்றும் தைரியத்தை நமக்கு வழங்குபவர்.



வாயு புத்திரனை வணங்கி வந்தால் வாழ்வில் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் நடக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை ஓங்கும். வைராக்கியத்துடன் கூடிய அனுமனை நினைத்தால் அவரது அருளால் பலமும், மன உறுதியும், நமக்குள் வந்து விட்டால் வாழ்வில் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நமக்கு வெற்றி கிட்டும். தோல்வி வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு கிடைக்கும்.

தினமும் ஆஞ்சநேயரை வணங்கி வர மனதில் வைராக்கியம் கூடும். குறிப்பாக சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் உகந்தது. அன்று ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் நமக்குக் கிட்டும். அஞ்சநேயரை வணங்கும் போது 11 முறை சுற்றி வணங்கி வழிபட வேண்டும்.


நீங்கள் நினைத்த காரியம் கை கூடவும் வாழ்வில் வெற்றி பெறவும் பஞ்சமுக ஆஞ்சநேய மாலா மந்திரத்தை அனுதிமும் 7 முறை பாராயணம் செய்யுங்கள். வீட்டிலும் செய்யலாம். ஆஞ்சநேயர் படம் இருந்தால் விளக்கேற்றி விட்டு இந்த மந்திரத்தைக் கூறுங்கள். ஆலயம் செல்ல முடியும் என்றால் ஆஞ்சநேயர் சந்நிதியில் விளக்கேற்றி 11 முறை வலம் வந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். கோழையாக இருப்பவர்களும் மன தைரியத்தோடு செயல்படும் வல்லமையை ஆஞ்சநேயர் வழங்குவார்.

 

ஆஞ்சநேயர் மந்திரம்.


ஓம் ராமதூதாய ஆஞ்சனேயாய

வாயு புத்ராய மகா பலாய

சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய

மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய

 கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய

சப்த சமுத்ர நிராலங்கிதாய,

பிங்கள நயனாய அமித விக்ரமாய

சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய

சஞ்சீவினி சமாநயன

சமார்த்தாய  அங்கதலட்சுமண

கபி சைன்ய ப்ராண நிர்வாககாய

தசகண்ட வித்வம்ஸனாய

ராமேஷ்டாயபல்குணசகாய

சீதா சகித இராமச்சந்திர

ப்ராசதகாய –ட் ப்ரயோகாங்க

பஞ்சமுக ஹனுமதே நம

Popular posts from this blog

எந்த நட்சத்திரகாரர்கள் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது

ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்க ள் வரை அணியக்கூடிய சக்தி வாய்ந்த பொருள் ஆகும். சிவ பெருமான் தன்னை ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்து   உள்ளார் என்றால் அதன் மகத்துவம் பற்றி நாம் அறிய லா ம்.  ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என்று போற்றப்படுகிறது. சிவனின் அருளைப் பெற ருத்ராட்சம் அணியலாம். ருத்ராட்சம் ஒரு மூலிகை என்றும் கூறலாம். நம் உடலோடு ஒட்டி இருந்தால் பல வித நோய்களில் இருந்து ந ம் மை காக்கும்.  இது உடல் ஆற்றல் மற்றும் மன ஆற்றலை அளிக்க வல்லது. எதிர்மறை சக்திகளை அழிக்கக் கூடியது. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை  முகம் என்று கூறுகிறோம். எத்தனை  கோடுகள் உள்ளனவோ அத்தனை முகம் உள்ளன என்று கூறுவோம் ஒவ் வொ ரு முகமும் வெவ்வேறு விசேஷ பலன்களை அளிக்கவல்லவை. எந்த நடசத் தி ரக்கார்கள் எந்த வகை ருத்ராட்சம் அணிய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். அசுவினி – 9 முகம் பரணி - 6 அல்லது 13 முகம் கார்த்திகை - 12 முகம் ரோகினி -   2 முகம்   மிருகசீரிடம் –   3 முகம்   திருவாதிரை –   8   முகம் புனர்பூசம்     -   5 முகம் பூசம் -   7 முகம் ஆயில்யம் – 4 முகம் மகம் – 9 முகம் பூரம்  - 6   அல்லது 1

பெண்களே, இந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் சொந்த வீடு கட்டும் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும்.

சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. சிறிய வீடாக இருந்தாலும் அது சொந்த வீடாக இருக்க வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் உண்டு. எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்பார்கள் . ஆனால் வீடு வாங்க வேண்டும் என்றால் கடன் வாங்க வேண்டும். அந்த கடனை நாம் அடைக்க வேண்டும்.  எனவே நமது பொருளாதார நிலை மற்றும் தகுதியை கருத்தில் கொண்டு தான் நாம் சொந்த வீடு வாங்க முடியும். தகுதிக்கு மீறிப் போனால் நாம் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே திட்டமிட்டு செயல்பட வேண்டும். நமது திட்டம் ஒரு புறம் என்றால் நாம் வெற்றி பெற கடவுளின் அருளும் வேண்டுமல்லவா ? நமது முயற்சியுடன் கடவுள் பிரார்த்தனையும் இணைந்தால் நமக்கு உத்வேகம் கூடும். வீடு கட்ட பணத்தை சேமிக்கும் எண்ணம் கூடும். சிக்கனத்தை கடைபிடிக்கத் தோன்றும் இப்படி தொடர்ந்து இருந்தால் வீடு கட்டும் கனவு சீக்கிரம் நிறைவேறும். இதற்கு வழிவகை கூறும் ஒரு ஆன்மீக பரிகாரத்தை இந்தப் பதிவில் காண்போம். சொந்த வீடு அமைய வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக நிறைய பரிகாரங்கள் உண்டு.நவகிரகங்களில் பூமிகாரகனாக திகழ்வது செவ்வாய் கிரகம். செவ்வாய்க்கு அதிபதி முருகன். சென்னையில் அமைந்து இருக்

சிவபெருமானின் அவதாரங்கள்

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன். பிறப்பும் இறப்பும் அற்றவாராக கருதப்படுகிறார். சைவ சமயதத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமான் பூமியில் மனிதனாக பிறந்ததை   சிவ   அவதாரங்கள் என்று கூறுகிறோம். பொதுவாக விஷ்ணுவைப் போல சிவபெருமான்   அவதாரம்   எடுப்பதில்லை. சிவபெருமான் மனிதனாக   அவதாரம்   எடுத்ததாக கூர்ம புராணம் கூறுகிறது .