- Get link
- Other Apps
நினைத்த காரியம் நடக்கவும் வாழக்கையில் வெற்றி பெறவும் பஞ்சமுக ஆஞ்சநேய மாலா மந்திரம்! இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் என்றுமே வெற்றி கிட்டும்.
நினைத்த காரியம் நடக்கவும் வாழக்கையில் வெற்றி பெறவும் பஞ்சமுக ஆஞ்சநேய மாலா மந்திரம்! இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் என்றுமே வெற்றி கிட்டும்.
சொல்லின் செல்வனாம் அனுமன் பக்திக்கும் வலிமைக்கும் பெயர் போனவர். பராக்கிரமசாலியான அனுமனின் ராம பக்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும். வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயர், என்று பல பெயர்கள் இவருக்கு உண்டு.அதிக சக்தியை தன்னுள் கொண்டு இருந்தாலும் தனது வலிமையை அறியாத அனுமன் தீவிர ராம பக்தன். ராம மந்திரம் இருக்கும் இடம் எல்லாம் அனுமார் இருப்பார்.
சிரத்தையுடன் கூடிய பக்திக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அனுமனை வணங்கினால் நமக்கு மன உறுதி கிட்டும். வலிமையும் ஆற்றலும் பெருகும். ஒரு கையில் சஞ்சீவி மலையும், ஒரு கையில் கதையும், நெஞ்சினுள் ராமர் சீதையையும் சுமந்து காட்சி தரும் அனுமன், பக்தியையும் வீரத்தையும் ஒரு சேரக் கொண்டவர். ராமர் மீது தான் கொண்ட பக்தியால் இலங்கையை பஸ்மம் ஆக்கி அரக்கரகளை துவம்சம் செய்த அனுமன் ராவணனை வெல்லும் அளவிற்கு பராக்கிரமம் இருந்தாலும் அடக்கத்துடன் இருந்தவர். நமக்கு அருள் புரிவதில் வல்லவர். மன உறுதி மற்றும் தைரியத்தை நமக்கு வழங்குபவர்.
வாயு புத்திரனை வணங்கி வந்தால் வாழ்வில் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் நடக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை ஓங்கும். வைராக்கியத்துடன் கூடிய அனுமனை நினைத்தால் அவரது அருளால் பலமும், மன உறுதியும், நமக்குள் வந்து விட்டால் வாழ்வில் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நமக்கு வெற்றி கிட்டும். தோல்வி வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு கிடைக்கும்.
தினமும் ஆஞ்சநேயரை வணங்கி வர மனதில் வைராக்கியம் கூடும். குறிப்பாக சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் உகந்தது. அன்று ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் நமக்குக் கிட்டும். அஞ்சநேயரை வணங்கும் போது 11 முறை சுற்றி வணங்கி வழிபட வேண்டும்.
நீங்கள் நினைத்த காரியம் கை கூடவும் வாழ்வில் வெற்றி பெறவும் பஞ்சமுக ஆஞ்சநேய மாலா மந்திரத்தை அனுதினமும் 7 முறை பாராயணம் செய்யுங்கள். வீட்டிலும் செய்யலாம். ஆஞ்சநேயர் படம் இருந்தால் விளக்கேற்றி விட்டு இந்த மந்திரத்தைக் கூறுங்கள். ஆலயம் செல்ல முடியும் என்றால் ஆஞ்சநேயர் சந்நிதியில் விளக்கேற்றி 11 முறை வலம் வந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். கோழையாக இருப்பவர்களும் மன தைரியத்தோடு செயல்படும் வல்லமையை ஆஞ்சநேயர் வழங்குவார்.
ஆஞ்சநேயர் மந்திரம்.
ஓம் ராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
ராமேஷ்டாயபல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாய –ட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம